விடிவதற்குள் டாக்ட்டர் தூக்கத்தில் இருந்து கண்களை திறந்து விட்டார். பாதித்தூக்கத்தில் தலையணையின் அடியில் துடித்து ஓய்ந்து போன தொலைபேசி தொடு திரையை எதோ நினைப்பு வரக் கட்டிலில் கிடந்தபடி மெல்லக் கைகளைத் தலையணையின் அடியில் துளைத்து தொலைபேசியை எடுத்தார். தொலைபேசியின் தொடு திரையில் அந்தக்குறுந்தகவலும் சில தொண்டை இறுகிபோன அழுகுரல்ப்பதிவுகளும் திரையில் அனுங்கிக்கொண்டிருந்தன. கண்களை அழுத்தித்துடைத்தபடியே குறுந்தகவல்களை எழுத்துப்பிழையின்றித் திரும்பத்திரும்ப பதட்டத்துடன் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் துரித கணேசன். சில நொடிகளின் பின்பு தெளிவாக அதை உறுதிசெய்தார். கருணைநாதனுடைய சகோதரி இறந்துவிட்டாள். அந்த குறுந்தகவலில் முக்கியமான வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது ‘தம்பி தங்கச்சி செத்த விசயத்த கருணைட்ட பக்குவமா சொல்லி அவனை ஆறுதல் படுத்து இதக்கேட்டால் கெலிகிச்சு போயிருவான் கவனமா சொல்லிவிடு என்றதுதான் அந்த வேண்டுகோள் . அப்போது இத்துயர் நிறைந்த செய்தியை எப்படிக் கருணைநாதனிடம் சொல்லுவதென்று டாக்டர் திணறிக்கொண்டிருந்தார். எப்படியாவது சொல்லிவிட வேண்டும். என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தார். தங்கையின் இழப்பை நண்பன் கருணைநாதன் இலகுவில் ஜீரணிப்பானா?அவனதுமனைவிதான் எப்படிதாங்கிக்கொள்வாள்? கருணையின் மனைவி அண்ணி அண்ணி என்று உருகிவளிவாளே இதை நினைக்கும் போது பூரணமான இருட்டு டாக்டருள் வியாபித்துக்கொண்டது . இந்த வருட ஆரம்பத்தில் கருணையின் மனைவி கர்ப்பவதி ஆகிய போது “என் வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுஇதைத் தவிர வேறு ஏதும் இல்லை மச்சான் என்று அடிக்கடி இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வான். அவனது மனைவியும் சேர்ந்து தலையாட்டி இதை உறுதி செய்த நாட்கள் பல. அப்படி இருக்க இந்த நேரங்களில் நெருங்கியவர்களின் மரணச்செய்தி அவளது மகப்பேற்றுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் அவரின் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது . அவர்களை ஆறுதல்ப்படுத்துவது என்ற கேள்வியே அவரை பாடாய்படுத்தின. இக்கொடியமரணம் அவனது முழுக்குடும்பத்தையும் வேரோடு உலுக்கிப்புரட்டிவிடப்போகின்றது என்பது டாக்டருக்கு தெளிவாகத்தெரிந்த உண்மை அதே நேரம் தன்னிடம் வழங்கிய பொறுப்பை டாக்டர் மிக கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளவேண்டுமென்று உறுதியாக இருந்தார்.
போர்வையை விலக்கி வெடுக்கென எழுந்த டாக்டர். குளியகறைக்குள் விரைந்து பின் ஜன்னலைத்திறந்து பார்த்தார். இருள் மெல்ல பிரிந்து சென்று கொண்டிருந்தது. அது சிந்தனை வயப்பட்ட அதிகாலை வேளையாக இருந்தது. சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தபடி மாடிச்சன்னல் வழியே அரை இருட்டில் வீதியைச் சரிந்து பார்த்தார். தெரு மின் விளக்குகள் சினுங்கிக்கொண்டிருந்தன. முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பிவிட்டு மடிக்கணணியை திறந்து அதன் முன் தன் கண்களை பதட்டத்தோடு படரவிட்டார். bbc செய்திகளைப் படிக்க ஆரம்பித்த டாக்டர் பின் லங்காசிறீ செய்திகளின் சுட்டியை அழுத்திய போது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. கணனியின் வலது பக்கத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளரும் இன் நாள் சிங்களஅரசாங்கத்தின்கைக்கூலியுமான சோதியா அரசாங்கத்தினால் விச ஊசி ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார். என்ற செய்தி இரத்த கலரில் எழுதப்பட்டு இருந்தது . செய்தியை படித்தவுடனே டாக்டர் கடும் உக்கிரமடைந்தவராய் கால்களால் நிலத்தை ஓங்கி உதைந்தார். அதிர்ச்சியில் அவரது முகம் வெற்றுக்காகிதத்தைப் போல் வெளிறிப்போனது. அவர் தனக்கு வாயிலே வந்த தூசனவார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தார். ஒவ்வொருவார்த்தைகளின் முடிவிலும் சூத்தியா ,பேன்சூத் போன்ற சொற்களை அழுத்தமாக சொல்ல மறக்கவில்லை. இயந்திரமாய் மணிக்கணணியை மூடிவிட்டு ஒருசிகரட்டை மீண்டும் பற்றவைத்து அதன் புகையால் தாறுமாறாக பல கிறுக்கல் சித்திரங்களை வரைந்தார். அறைமுழுவது புகைமண்டலம். தொடர்ந்து அவர் ஒரு டசின் சிகரட்டுக்களைப் புகைத்துதள்ளி இருக்கவேண்டும். டாக்டருக்கு நண்பன் கருணைநாதனுடைய நினைவுகள் வர அவரது கண்களில் நீர் சுரந்தது . நண்பன் மீது அளவற்ற கருணை மிகுதியால் மனதில் சஞ்சலப்பட்ட அவர் பற்களை நறும்பி இறுதியாக புண்டமக்களே! என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லி சுவர் மீது ஓங்கிக்குத்தினார். அப்போது இருள் ஒழிந்து கொண்டு இருந்தது. மதியாபரணம் துரித கணேசன் என்கிற தமிழர் டாக்டர் ஸ்பீட் என்ற பெயரினால் லண்டனில் தமிழர்களினால் அறியப்பட்டார். ஸ்பீட்டும் கருணை நாதனும் மிக நெருங்கிய நண்பர்கள். பல வருடப்பழக்கம். அதை விட டாக்டர்தான் கருணைநாதனின் முழுக்குடும்பத்துக்கும் குடும்ப வைத்தியர் என்ற உயர்ந்த அந்தஸ்துக்குரியவர். கருணைநாதன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து ஏளெட்டுவருடங்கள்ஆகிவிட்டன. அதற்கு ஓரிருவருடங்களின் முன் ஓர் நத்தார்ப் பனி இரவொன்றில் தான் மொத்தமான ஒலிவ் நிற குளிரங்கியை அணிந்தபடி விமான நிலைய வாயிலில் தோன்றினார். கருணைநாதன் என்ற முழுப்பெயரையுடைய கருணை.
உள்ளம் துக்கத்தால் தோய்ந்து போய் கிடந்தது. இன்று வைத்திய சாலைக்கு செல்வதற்கான மன நிலையோ ஈடுபாடோ இல்லாமல் பேயடித்தாற்போல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த டாக்ட்டர். இறுதியாக ஒரு முடிவோடு வண்டியில் ஏறினார் . வீட்டில் இருந்து வைத்திய சாலைக்கு சென்றடைந்த அவரால் எதுவித செயலிலும் ஈடுபடமுடியவில்லை . முடிவில்லாத வெறுப்பின் நிழல் அவரைத் தொடர்ந்தது. கழுத்தில் இருந்த டெடஸ்கோப்பை சுருட்டி வெண்ணிறக் கோட்டுக்குள் வைத்துவிட்டு செல்போனை எடுத்து ஜீன்ஸ் பைக்குள் செருகியபடி பெரும்பதட்டத்தோடு மருத்துவமனை வளாகப் பூங்காவை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தார். சூரியன் நடு உச்சிக்கு வந்துவிட்டான். டாக்டர் கடும் யோசனையோடு, மனம் கலவரப்பட்டவராய் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார். டாக்டர் தோல் சிவத்த மனிசன் அழகான முகவெட்டு பார்ப்பதற்கு ஈரானிய நடிகரைப்போல தோற்றம் கொண்டவர். யாரும் இவரை இந்தியர் எனச் சொல்லமாட்டார்கள். அப்படிப்பளிச் சென்ற முகம் இப்போது கலவரப்பட்டு நெற்றி வழியே தாறுமாறாக நரம்புகள் புடைத்து அவை கழுத்தைத் தொட்டுக்கொண்டு நின்றன. இப்போது சொல்லுவோமா? வேண்டாமா இல்லைவீட்டுக்கு சென்று சொன்னால் என்ன? என்ற கேள்விகள் அவரிடம் எழுந்தன. மண்டையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருந்தார். சொல்வதற்கு உகந்த நேரத்துக்காக காத்திருந்தார். கருணைநாதன் இப்போது வேலையில் நிப்பான். இப்போது அவனது வேலையை குழப்பவேண்டாம். என முடிவெடுத்தார். அவர் தன்னுடைய மேல் கோட்டின் கையைச் சுருக்கி இழுத்து விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் மதியம் 12 மணி. இல்லை சொல்வதற்குரியதருணம் இதுவல்ல. சற்றுத்தாமதித்துச் சொல்லுவோம். அல்லது நேராக உணவகத்துக்குச் சென்று சொல்லிவிட்டால் என்ன? மூளையில் எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்ததன. கறுத்து சுருண்டு கிடந்த தலை முடியை கையை விரித்து விரல்களால் கோதிக்கொண்டார். மீண்டும் சிகரட் ஒன்றை உதட்டில் கவ்விக்கொண்டு மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார். வெண்புகைச்சுழிகள் மூக்கின் துவாரங்களின் ஊடே அவரை அறியாமலே குபுகுபு என்று வெளிவந்துகொண்டிருந்தன.
அங்குமிங்கும் உலாத்தித்திரிந்த அவர் இறுதியாக மருத்துவமனைவளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கோடை காலப்பூங்காவின் நடுவில் உள்ள பச்சை நிற மர நாற்காலியில் அமர்ந்தார். அவரது முகத்தில் கலவரம் தணிந்தபாடில்லை. அவரின் இருக்கைக்கு எதிரே எலுமிச்சைச் செடியில் எலுமிச்சை காய்த்திருந்தன பிஞ்சுகளின் நறுமணம் அவருக்குப் புத்துணர்வை கொடுக்கவில்லை. அவர் சிந்தனையில் உறைந்துபோனார். அவர் எதிரே கருவண்டு ஒன்று வெளிப்பட்டது. செடியில் அது நிற்பதுவும் பறப்பதுமாக அலைக்கழித்தது. முன்னங்கால்கள் இரண்டையும் கும்புடுவது போலவும் உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து பல நாட்டிய முத்திரைகளுடன் அவரின் முன்னால் வெளிப்பட்டது. சில நிமிடங்கள் தாமதிக்காமல் இறுதியாக தன் பின் கால்களை மெல்ல உயர்த்தி மெல்லிய வீ வடிவசெட்டைகளை உதறியபடி பேரிரச்சலோடு அவரின் வெளுத்த முகத்தில் மொய்த்துப் பறக்க சடுதியில் கைகளால் மூர்க்கத்தோடு வண்டை துரத்திய படி கண்களை ஒருமுறை படபட வென வெட்டிமூடினார். இப்போது டாக்டர் நூறாவது முறையாக அதே கெட்ட வார்த்தையை மேல் கோட்டை உதறிய படி எரிச்சலோடு சொன்னார். அப்போது அவரது கடிகார முட்கள் சரியாக மதியம் பன்னிரண்டுமணியில் இருந்து மெல்ல நகர ஆரம்பித்தன. தன் கால் அடியில் சிதறி கிடந்த சருகுகளை ஆக்ரோஷத்துடன் உதைத்தார். சில இலைகள் விர் விர் என பறந்து இன்னுமோர் மேஜையில் பறவைபோல் அமர்ந்தன. இப்போது நேரத்தை சரிபார்த்தார். முட்கள் நகர மறுத்தன. ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் கிடந்த செல்போனை எடுத்து கருணைநாதனின் தொடர்பு இலக்கத்தை கைகளினால் உருட்டிக்கொண்டார். பின் ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். கருணையை தொலைபேசியில் அழைத்தார். மறுபக்கம் கருணை காய்கறிகளைவெட்டி நீரில் இட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
“ஹலோ மச்சி சொல்லு என்ன அவசர அலுவலாடா? என்றார் கருணை.
இல்லமச்சான்..
என்று பதிலுரைத்த படி சொற்களை வேகமாக விழுங்கினார் வைத்தியர். பின் அடைத்த குரலில் இழுக்க சரி வேல முடிய அடிக்கிறண்டா என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தார். அவர் கூறவந்த செய்தியை கூறமுடியாமல் போனது ஒருவகையில் அவருக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் அப்பதட்டமான நிலையில் இருந்து அவரால் தன்னை விடுவிக்கமுடியவில்லை. அல்லது எத்தணித்துக் கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்கள் கதிரையில் அமர்ந்தபடியே காலையில் நேர்த்தியாக சீவி விடாமல் திரண்டு கிடந்த கேசத்தை விரல்களால் கோதி ஆசுவாசமடைந்த படியே நிமிர்ந்து மகப்பேற்று வைத்தியசாலைக் கட்டிடத்தை நோக்கினார். அது இன்னும் அமைதியாகவே இருந்து. அவரது உள்ளத்தில் பயம் மட்டும் வெடித்து பீறிட்டுக்கொண்டு இருந்தது. இன்னும் அவரது மனதில் எந்த மாறுதலும் இல்லை. கடிகாரத்தைத் தீவிரமாகப் பார்த்தார். அவருக்கான ஓய்வு நேரம் கடந்துவிட்டது என்பதை உறுதி செய்தார். உள்ளே சென்ற டாக்டரால் வைத்தியப் பரிசோதனை எதுவும் செய்யமுடியவில்லை. நினைவுச்சுழிகள் அவரை பின்னிழுத்து ராட்சத மலைப் பாம்புகளைப் போலச் சுருட்டிக்கொண்டது. உடனடியாக நண்பன் கருணைநாதனை சந்தித்து அவனுடன் துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனதுத் துடித்தார். விறுவிறு என்று பளிங்குக்கல் பதிக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தார். அங்கே சில மணிநேரங்களில் உயரதிகாரியுடன் தீவிர சம்பாஷனையின் பின் வைத்தியசாலையை விட்டு வேகமாக வெளியேறினார். வண்டிச்சக்கரம் இடை நிலை வேகத்தில் சுற்றிய படி கருணைநாதனின் அடுக்குமாடியை நோக்கி சென்று கொண்டிருந்தது. டாக்டரின் முகம் வாடிவதங்கிப்போய் இருந்தது. யுத்தகளத்தில் போர் வீரர் மடிந்த பின் தகவலை வழங்கச் செல்லும் சக வீரனின் மனநிலையை ஒத்த நிலையை மாற்றிக்கொள்ள முயன்று கொண்டிருந்தார் அவர் . வண்டி இன்னும் சற்று வேகம் குறைக்கப்பட்டு ஓரிடத்தில் நின்றது. பெட்டியில் இருந்து ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்த படி புகையை ஊதித்தள்ளினார்.
நேரம் நண்பகல் 2 மணிஆகிவிட்டது. காரின் கறுப்புக்கண்ணாடி உஸ்ஸ்ஸ்… என்ற சத்தத்தோடு சற்றுக் கீழ் இறங்க டாக்டர் கறுப்புக் கண்ணாடியின் இடைவெளியால் கருணைநாதனின் வேலைத்தளத்தை தன் கூர்மையான கண்களால் நோட்டமிட்டார். கருணையின் நடமாட்டம் அங்கு இல்லை. சூசித்துக்கொண்ட அவர். ரயில் கடவை ஓரமாகவேகமாக வண்டியை செலுத்தினார். வலப்பக்கம் மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சில வானுயர்ந்தகட்டிடங்களை நெருங்க வண்டி எஞ்சின் வேகத்தை குறைத்துக்கொண்டு நத்தையைப் போல வண்டி ஊர்ந்து தொடர்மாடியின் தரிப்பிடத்தை அடைந்தது. ஓரிரு நிமிடங்களில் டாக்டர் கருணைநாதனின் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினார். கருணைநாதனின் மனைவி ஜீவிதா பெரிய வயிற்றோடு அரக்கி அரக்கி நடந்து வந்து கதவை மெதுவாக திறந்து உள்ளே வரவேற்றாள். அதற்கிடையில் கருணை வாமச்சான் என்ன நேரத்துக்கு வந்திட்டாய் என்றபடி வாயிலை நோக்கி வந்தார் கருணை. டாக்டர் எதுவும் சொல்லவில்லை துயரரேகை படிந்த முகத்துடன் வரவேற்பறையில் அமர்ந்தார். எதிரே மேசையில் கிடந்த ஏதோ நாளிதழை திறந்த படிக்க முற்பட
என்ன அண்ணா ஏதும்குடிக்கிறீங்களா?
ஜீவிதா கேட்க அதை கண்டிக்கும் முகமாக என்ன கேட்டுக் கொண்டு இருக்கிறாய்? தண்ணீ கொண்டுவா முதலில் வேகமாக குசினியை அடைந்த ஜீவிதா கண்ணாடிக் குவளையில் குளிர்ந்த நீரோடு குலுங்காமல் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பொறுமை இழந்த கருணை என்ன மச்சி என்ன இப்பிடி இருக்கிறாய் முகமெல்லாம் வாடிப்போய் என்னடா ஆச்சு சொல்லுறிய இல்லையா? என பயமுறுத்தும் தொனியில் கேட்க தலை குனிந்து இருந்த டாக்டர் சற்று நிமிர்ந்தார். அப்போது டாக்டரின் கண்களில் இருந்து பொலுபொலுவென கண்ணீர் ஆறு ஓடியது . உதடுகள் துடித்தன. எதுவும் கூறமுடியாதவாறு தொண்டை அடைத்து கரகரத்தது. மரத்தில் இருந்து பிடுங்கப்பட இளம் தளிரைப்போல நடுங்கிக்கொண்டு இருந்தார் டாக்ட்டர் ஸ்பீட்
மச்சான் காலங்காலத்தால ரெலிபோண் அடிச்சவ அம்மா!
அம்மாக்கு என்னாச்சு….
அம்மாக்கு ஒண்டுமில்ல தங்கச்சிக்குத்தான்…… என டாக்டர் இழுக்க என்னடா சொல்லு அவளுக்கு என்ன?
தங்கச்சி திடீரெண்டுமயக்கம் போட்டு விழுந்திட்டாளாம் உடன கொஸ்பிட்டல் கொண்டுபோக ஒருமணித்தியாலத்தால ஆள்….
கையில் நீர்க்குவளையுடன் வந்து கொண்டிருந்த ஜீவிதா செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் தொம் என்று கையை நழுவ விட்டாள் தரையில் வீழ்ந்த குவளை சன்னமாக வெடித்துச்சிதறியது. அதைக் கண்ட கருணைநாதன் ஓடிப்போய் அவளைப் பத்திரமாக கதிரை ஒன்றில் அமர்த்தினார். டாக்டர் செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றார். ஜீவிதா கருணைநாதனை கட்டியணைத்தபடியே கதறிஅழுதாள். துக்கத்தில் வாயடைத்துப்போய் நின்ற நண்பனை டாக்டர் சமாதானப்படுத்த எத்தனித்துக்கொண்டிருந்தார். பொங்கி எழுந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியவில்லை .ஓ வென்று கதறினார் டாக்டர்.
“மச்சான் இதுக்குள்ள பெரியகேம் நடந்திருக்குடா இந்தச்சாவுக்கு பின்னால அரசாங்கம் இருக்கு என்று கதை வருது. இன்ரர்நெட்ல வேற செய்திபோட்டு இருக்கிறாங்கடா
“முன்னாள் பெண்போராளி சோதியா விச ஊசி ஏற்றிக் கொலை நம்ப முடியலடா மச்சான்” அதைவிட கடுப்பான விசயம் இந்த தமிழ் தேவிடியா விபச்சார ஊடகம் ச்சைக் அவளப் பற்றி கண்டபடி கண் மூடித்தனமா ஏதோ எல்லாம் எழுதித் தள்ளுதுடா தாங்க முடிலடா மச்சி அவள் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் செய்த தியாகாம் எல்லாம் மண்ணாப்போச்சுடா..
அதுவரை தரையில் குனிந்திருந்த கருணைநாதன் செய்தியை கேட்டதும் கடும் சீற்றமடைந்தார். எழுந்து சீறிப்பாய்ந்தார். உதடுகள் துடித்தன. இயந்திரமாக தனது விரல்களை மடித்து எதிர்ச் சுவரை மூர்க்கத்தோடு தாக்கினார். சுவருக்கு எந்த பாதிப்பும் இல்லை கையால் இரத்தம் ஓடியது. ஜீவிதா அச்சத்தில் கருணைநாதனின் கைகளைப்பற்றினாள் பற்களை நறநறவென்று நறும்பிக்கொண்டு ராட்சச சத்தத்தோடு நாதன் அங்குமிங்கும் நடந்துதிரிந்தார். ஆனாலும் கருணையால் அந்தநிலையில் இருந்து விடுபடமுடியவில்லை. நாதனின் கண்களில் இருந்து ஈரக்கசிவு மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சற்று நேரத்தின் பின் சோபா வொன்றில் அமர்ந்துகொண்டார். ஒளி மெல்ல மெல்ல அகல இருள்வீட்டை சூழ்ந்துகொண்டது. விறாந்தையில் ஜீவிதாவுடன் வெளி ஆட்களின் உரையாடல் கருணையின் செவிகளில் அழுத்தமாக வீழ்ந்தது . சன்னலுக்கு வெளியே பிரமாண்ட நகரம் வர்ணங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த இரவு முழுவதும் வீடு இருளடைந்து சோகத்தில் மூழ்கிக்கிடந்தது. மரண அமைதியை பொதித்து வைத்த அறை போல தோன்றியது.
02
அண்மையில் டாக்டர் ஸ்பீட் எனக்குச்சொன்னகதை…
வாழ்க்கையில் இலகுவில் எங்களால் மறக்கக்கூடிய நாளில்லை. பாலைவன வெயிலில் குளித்தெழுந்த நாட்கள். ஆரம்பத்திலேயே கதையை இடை நிறுத்தி சிறிய மௌனத்தின் பின் முகத்தை இரு கரங்களாலும் தேய்த்தபடி மீண்டும் ஆரம்பித்தார் டாக்டர். நான் இந்தியாவில் இருந்து மருத்துவசேவையின் நிமித்தமாக வளை குடாநாடான கட்டார் நாட்டுக்கு கருணைநாதன் கட்டாரில் காலடி வைப்பதற்கு சரியாக நான்கரை வருடங்களின் முன்பு தலைநகரம் டோகாவுக்கு வந்து சேர்ந்தேன். எனக்கான பணியிடம் அகமட்அல்தானி என்ற மருத்துவமனையில் வழங்கப்பட்டிருந்தது. நல்ல ஊதியம் நல்ல அக்கமெண்டேசன் ,எனது போக்குவரத்துக்காக ஒரு சாரதியுடன் ஒருவண்டி இலவசமாக வழங்கி இருந்தார்கள். இந்த வைத்தியசாலை வெளிநாடுகளில் இருந்து கூலித் தொழிலாளர்களாக வந்தேறும் சகலருக்குமானது. பெயர் போன மருத்துமனை. இவ்வாறு கட்டாரில் என்னுடைய மருத்துவப்பணியோடு மெல்லமெல்ல வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுசென்றேன். கடும் வெயில் எரித்துக் கொண்டிருந்த மதிய வேளை ஒன்றிலே பார்ப்பதற்கு வாட்ட சாட்டமான மத்திய உயரம் வெழுத்த முகமும் சுருண்டு மடிந்த தலைமுடியும் கொண்ட அந்தபேஷண்ட் முகம் வாடிப் போய் தலை முடி கூட சரியாக சீவாமல் வரிசையில் நின்ற அந்தஉருவம் மெல்லமெல்லஎன்னுடைய அறையை நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தது.
“அசலாமுஅலைக்கும்”
பதிலுக்கு அந்த பேஷண்டின் வாயில் இருந்து எந்த பதில்வார்த்தையும்வெளிவரவில்லை. சட்டென நிமிர்ந்து அந்த உருவத்தைப்பார்த்தேன். உதட்டில் சிறு புன்னகை தவிர முகத்தில் வேறு எதுவித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அதைக்கூட வெளிப்படுத்த அவன் பெரும் பாடுபட்டிருக்கவேண்டும். அவனின் கண்கள் சற்று மேல் நோக்கிச் சொருகி இருந்தன. துன்பத்தின் ரேகை கன்னா பின்னா வென்று முகத்தில் பரவ அவன் எனக்கு முன்னால் வைக்கப்படிருந்த வெண்நிற பிளாஸ்டிக் கதிரையில் மெதுவாகஅமர்ந்தான்.
கியாஹ்லேபிறதர்?
போலோஆப்காநாம்தோகியாஹே?
எந்தபதிலும்இல்லை!
யவாப்தேதோ….
அவனதுபத்தாக்காவைவாங்கிக்கொண்டுபெயரைகுனிந்துவாசித்தபடி
ஹிந்திமாலுமேபாஹ்ய்
நோ…?
எந்தஅனுங்கலுமில்லை. சற்று எரிச்சல் கொள்ளத்தொடங்கினேன். ஒரு வேளை வாய்பேசாத பெடியனோ என்ற முடிவுக்கு வருவதற்குள் சிறிய அமைதியின் பின் காய்ந்து வெடித்துப்போன உதடுகள் மெதுவாக திறந்து
நான் தமிழ்….
ஓ..தமிழா? சொல்லுங்கோ என்ன பிரச்சனை உடம்புக்கு? எத்தின நாள் வேலைக்கிபோக இல்லை நீங்களு? எப்பவருத்தம் வந்தது?
பேஷண்ட் கதிரையில் தலையை சாய்த்தபடி ஏதோ சொல்ல முயற்சித்தான். அப்போது நான் அவனது வாயின் வார்த்தைகள் வெளிப்படும் வரை பொறுமையுடன் காத்திருந்தேன். மீண்டும் அவனிடம் மெல்லிய புன்முறுவல் வெளிப்பட்டது. அது செயற்கையானது என என் பழுத்த விஞ்ஞான மூளை இலகுவாக கண்டுபிடித்து விட்டது. இது எனது வைத்தியத்துறையில் முதல் அனுபவம். ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்குவருகிறார்கள் போகிறார்கள் அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள். ஆனாலும் ஒரு சிலரை மட்டுமே எப்போதும் நினைவு கொள்ளமுடிகிறது. அன்று தான் முதல் முதலாக கருணைநாதனை சந்தித்தேன். அவன் கட்டாரில் சனய்யா என்ற இடத்தில் தொழிலாளருக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இருந்தான். தகப்பன் பெயர் முத்தர் தாயின் பெயர்திலகவதி ஒரு தங்கை சோதியா என்ற இயக்கப் பெயருடைய ராஜீ. கருணையுடன் கூடப்பிறந்தவள். சில வாரங்கள் கழிந்த பின் மீண்டும் கருணையை சந்திக்க இரண்டாவது வாய்ப்புகிடைத்தது. இம்முறை வேலைத்தளத்தில் மூக்கு வாயினால் இரத்தம் கக்கியதாகக் கூறி அவனது பாத்தாக்கா அட்டையில் யாழ்ப்பாணம் என்று குத்தப்பட்ட பெடியனை கருணை நாதன் வைத்தியசாலைக்கு அழைத்துவந்தான். இப்போது சிறிய மாற்றம் தலைமுடியை பொலிஸ்குறொப் அடித்து இருந்தான். கடும் வேலை முகம் மட்டும் வெயிலில் காய்ந்து சிவந்து போய்க்கிடந்தது. இம் முறைதான் அவன் பேச்சில் மாற்றம் நிகழ்ந்து இருப்பதைக் கண்டேன்.
மூன்று நாட்களாக புழுதிப்புயல் ஓயாமல் சன்னயா நகரில் வீசிக்கொண்டிருந்தது . மூன்றாம் நாள் தீவிரமாக சற்று மூர்க்கம்டைந்து அதன் எல்லைக் கோட்டைத் தாண்டி சவுதி நாட்டுக்குப் படையெடுத்ததனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்துபோனது. வீதியைப்பார்க்க முடியவில்லை. எங்கும் புழுதிக்காடு. அடிக்கடி அல்ஜசீரா மத்தியகிழக்கு செய்திகளில் சனயாவைத் தாக்கிய புழுதிப்புயல் பற்றியே செய்திகள் வந்தவண்ணமிருந்தன. ஒவ்வொரு விடுமுறை நாள் புதனும் ஆறுமணிக்கு முன்னர் சகவைத்தியர்களுடன் வேட்டை நாய் றேஸ் பார்க்க நான் செல்வது வழக்கம். வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த பந்தயம் களைகட்டும் இருபதுக்கும் குறையாத ஒருவகையான உடல்மெலிந்து ஒட்டிப் போன வயிற்றுடன் பந்தயத் திடலில் வரிசையாக வேட்டை நாய்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். இருபத்தைந்து அடிகள் தூரத்தில் இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கும் அதன் பின் பகுதியில் ஒரு முழு ஆட்டுக்குட்டி அடித்து தொங்கவிட்டு இருப்பார்கள். இரத்த வாடையை பந்தய நாய்கள் நுகர்ந்ததும் வெறிகொண்டு இரையைப்பிடிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் வேளை போட்டி தயார் என சமிங்சை வழங்கப்பட்டதும் மின்னல்வேகத்தில் காற்றைக்கிழித்த படி வேட்டைநாய்கள் ஆட்டிறைச்சியைத்தேடி பாய்ந்து ஓடும். இது குதிரைப் பந்தயத்தைவிட அலாதியானது. வயது வேறு பாடின்றி அராபியர்கள் அனைவரும் இதில் பங்கெடுப்பார்கள். முதன் முத்லாக இரையை கைப்பற்றிய நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற நாய் உரிமையாளருக்கு பல்லாயிரக்கணக்கான றியால்கள் பரிசாககிடைக்கும். தோற்றுப்போன நாய்களின் நிலை பரிதாபமானது. இதைப்பார்ப்பவர்கள் நிச்சயமாக அராபியர்கள் ஒரு மொக்கனுகள் என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள் .போட்டி முற்றுப்பெறும் வரைக்கும் நல்ல ஆர்ப்பாட்டமும் ஆரவாரமுமாக இருக்கும் திடல் பந்தயத்தின் பின்னர் இரத்த ஆறாக காட்சி தரும். தோல்வியடைந்த நாய்களை கூரியவாள்கள் கொண்டு வெட்டிக் கொன்று விடுவது அவர்களது மரபு. இக்காட்சிகளைப் பார்க்க நாங்கள் யாரும் நிற்பதில்லை. அவ்வளவு கொடூரம். இது அராபியர்களுக்கு வீர விளையாட்டு இவ் வீர விளையாட்டைக்காண பல ஊர்களில் இருந்து தமிழர்கள் மலையாளிகள் என பலரும் கூடுவார்கள் இவ்வாறு கூடும் ஒரு நாளில்தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றது.
அப்போது கருணைநாதன் ஆள் நல்ல வாட்டசாட்டமாக மாறி இருந்தான். பார்ப்பதற்கு அவன் முகம் அவனது பெயரைப் போல கருணையின் திரு உருவமாக வெளிப்பட்டது. தூரத்தில் தனியாக வேட்டை நாய்ப் பந்தையத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கருணையை புழுதி வீசிக்கொண்டிருந்த அந்த பிற்பகல் வேளை சந்தித்தேன். கண்டதும் மரியாதையுடன் கைகளைக் குலுக்கினான். நிறைய பேசினோம். இந்த வீரவிளையாட்டில் கொல்லப்படும் நாய்கள் குறித்து அதிகமாக இரக்கம் கொண்டிருந்தான். தானும் வீட்டில் நாய் வளர்ப்பதாகவும் தமது குடும்பம் எப்படி அதை அன்புடன் பராமரிக்கிறார்கள் என்று சொன்னபோது அவன் மீது அளவுகடந்த பிரியம் ஏற்பட்டு விட்டது . மேலும் விரைவில் தன்னுடைய தங்கையின் கணவனை கட்டாருக்கு அழைத்துவரவேண்டும் என்று கூறினான். நாட்டில் போர் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனாலும் கெடுபிடிகள் தீர்ந்து மக்கள் சுமுகமாக வாழக் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளாவது தேவை. வேலை இல்லாத் திண்டாட்டம். வீட்டுப்பிரச்சனையைச் சமாளிக்க இன்னும் ஒருவர் வெளி நாட்டிக்கு வந்தால் தான் தீரும் என்று பொறுப்புணர்ச்சியோடு கூறினார். கருணை மீது அளவற்ற கருணையும் மதிப்பும்அக்கணம் எனக்குள் பிறந்துவிட்டது. மனதுக்குள் பட்டதை தயக்கமும் ஒளிவு மறைவு மின்றி வெளிப்படையாகப் பேசுகின்றானே எதோ ஒரு வகையில் உதவ வாய்ப்புத்தேடினேன். குடிவெறி இல்லாமல் தன் குடும்பத்தை முன்னேற்றவேண்டும் எனதுடிக்கும் ஒருவனுக்கு உதவவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன். புழுதிப்புயல் சவுதிஅரேபியாவின் எல்லையை ஆக்கிரமித்தபடி இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் சில தொழிலாளிகள் காவி நிற உடையுடன் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தனர். நானும் கருணை எனஅழைக்கப்படும் கருணைநாதனும் வேட்டைநாய் ஓட்டப்பந்தயம் இடம்பெற்ற திடலில் இருந்து மெல்ல நடந்து என்னுடைய வண்டி நிறுத்தப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்றோம். எங்களுக்கு பின்னால் கருணையுடைய நண்பன் தொலைபேசியில் யாருடனோ இந்திமொழியில் உரையாடிக்கொண்டு வந்தான்.
மணல் மேடைகளை தாண்டி என்னுடைய வண்டியை அண்மித்த போது நேரம் மதியம் 6.00 மணியைத்தாண்டிவிட்டது. பள்ளிவாசல்களில் இருந்து வாங்கொலிகள் தாறுமாறாக ஒலித்துக்கொண்டிருந்தது. பந்தயத்திடலில் இருந்து மக்கள் வேகமாக தொழுகைக்காகச் சென்று கொண்டிருக்கின்றனர். சைக்கிள் ரியூப்புக்களினால் நுட்பமாக செய்யப்பட்ட சில பந்துகளை கிரிக்கெட் மட்டைகளால் வீசி அடித்தபடி சில இளைஞர்கள். உருது மொழி பேசிக்கொண்டு வந்தார்கள் அப்போது அதில் வந்த சிலர் கருணையுடன் கைகுலுக்கிவிட்டு செல்கின்றனர். அப்போது கருணை சொன்னான்
“இந்தப்பாக்கிஸ்தானிகளின்ர கேம்புக்கு முன் கேம்பு தான் எங்கட கேம்ப் டொக்டர் கிறிக்கெட் விளையாட என்னையும் அழைப்பார்கள். நான் ஓரிரு தடவை விளையாடி இருக்கிறேன்” என இருமியபடி சொன்னான். இப்போது கருணையுடன் வந்தவன் தொலைபேசிப்பேச்சை நிறுத்தி விட்டான்.
சரி டாக்டர் போச்சு வாங்க இன்னொரு நாள் சந்திப்போம் என்ற போது என்னுடைய மனம் கேட்கவில்லை நானும் சனயாவாலதான் நஷினலுக்குப்போறேன். ஏறுங்க நான் உங்கட கேம்புக்கு கொண்டு போய்வுடுறன் இருட்டுப்படுத்து இந்தப்புழுதிக்கால எப்ப போய் சேர போறீங்க நாளைக்கு வேல வேற இல்ல டாக்ட்டர் உங்களுக்கு ஏன் சிரமம்
சரி சரி ஏறுங்க என்று அழுத்தமாக கூறிய போது. இருவரும் தயங்கித்தயங்கி ஏறினர். என்னுடைய வண்டிக்கண்ணாடியை இருக்கையில் இருந்து சரி செய்த போது அவர்கள் முகத்தில் ஏதோ கலவரம் வெளிப்பட்டது. டஸ்போட்டில் இருந்து இளையராஜா ஹிட் சீடியை எடுத்து வண்டியில் ஒலிக்கச்செய்த போது அவர்கள் இருவரது முகத்தில் எந்த ஈயாட்டமும் இல்லை. அவர்களுடைய சிந்தனை எங்கோ பறந்துகொண்டு இருந்தது. அவர்களைத்திசை திருப்புவதற்காக
ஏதும் குடிக்கப்போறீங்களா ? பெப்சி கிப்சி
இல்ல… டொக்டர் பறவால ஒரே சொல்லில பதில் வந்தது.
சரி ம்ம்ம உங்கட முதிர் எப்படி நல்லவனா? சீ சீ அவன் ஒரு நாய் மலையாளி எங்கள கண்டால் அவனுக்கு புடிக்காது பேய் மாதிரி நிப்பான் இந்தியாக்காரரை மட்டும் நல்லா கவனிப்பான். எங்கள மாதிரி சிறீலங்காக்காரரை கண்ணில காட்ட கூடாது அப்பிடி ஒரு சனியன் என்று பற்களை நறும்பியபடி சொன்னான்.
ஹலோ நானும் இந்தியன் தான் மெட்றாஸ் காரன் என்னையும் அப்படி நினைக்காதீங்க தோஸ்த்
சீ சீ இல்ல டொக்டர் நீங்க ஏன் அப்பிடி சொல்றீங்க.
எங்கட போராட்டமும் எங்கட கஸ்ரமும் இந்த மலையாளிமாருக்கு மயிர் மாதிரியாம் அண்டைக்கி என்னோட கொழுவிப்போட்டு முகத்தில அடிச்ச மாதிரி சொன்னான். ராஜீவ் காந்திய கொண்டுபோட்டோமாம் மயிரனுக்கு அதுதான் பிரச்சனையாம் இதைக்கூறும்போது வண்டி கிட்டத்தட்ட அவர்களது கேம்பை அண்மித்து விட்டது. சனயாவில் ஒரு பதிவான கூரையுடன் அமைக்கப்பட்ட நீண்ட எஸ்டேட் வீடுகள் போன்ற வடிவத்தையுடைய கட்டிடத்தின் முன்பு வண்டியை நிறுத்தச்சொன்னார்கள். தெங்க்ஸ் டாக்டர் என கருணையுடன் வந்தவன் கண்களை சிமிட்டியபடி கூறினான். நேரமாச்சு என்னொரு நாள் பார்ப்போம் என்றேன். இல்லை வந்து விட்டீகள் ஒருமுறை வாருங்கள் என கருணை அழைக்க அழைக்க அதை தட்ட முடியவில்லை. அவர்கள் என்னை வற்புறுத்தி அழைத்துகொண்டு சென்றார்கள். இலக்கம் 67 என்ற பொறிக்கப்பட்ட அறையினுள் மூவரும் நுழைந்தோம் அறை முழுவதும் இருளில் மூழ்கிகிடந்தது . எங்கும் நெருக்கமும் புழுக்கமும் மண்டிக்கிடந்தது வாயிலில் காலணிகளின் குவியல் அவர்கள் ரூம் வாசலை திறந்த போது அங்கே இயக்கப்பாடல் ஒன்று தொலைக்காட்சிபெட்டியில் ஓடிக்கொண்டு இருந்தது. உள்ளங்கையில் சிறு பொடித்தூள்களை உள்ளங்கையில் வைத்து மறு கையால் தேய்த்து ஒரு சிறு பொட்டலமாக உருட்டி அதை தன் வாயில் திணித்த படியே ஒரு வங்களதேச வாலிபன் என்னை வரவேற்றான். உள் நுழைந்தவுடன் குப்பென வியர்வை நாற்றம் நாசியைப் பதம் பார்த்தது. இப்படி ஒரு நாற்றத்தை வாழ்க்கையில் நுகர்ந்ததில்லை. புளித்துப்போன உடைகளின் நாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் தான் முதன் முதலாக செல்லப்பாவுடைய பச்சை வயலே என்று தொடங்கும் அந்தப்பாடலை கேட்டேன். இப்போது லண்டனில் கூட அந்தப்பாடல் என்னுடைய மேர்சடஸ் காரில் ஒலிக்கக் கேட்டுகொண்டிருப்பேன். அந்தப்படாடல் ஏதோ ஒரு சோகமான சூழலில் அங்கு இருந்தவர்களால் கேட்கப்பட்டது. தலையை சுழற்றுவது போல இருந்தது நாற்றம். வாங்க டாக்டர் என்ற படி காலியாக கிடந்த கட்டிலில் குவிந்து கிடந்த உடைகளை அள்ளி வேறு எங்கோ மூலையில் மறைத்துப்போட்டான். இப்போது இருக்கை தயார். அதில் நான் அமர்த்தப்பட்டேன். டாக்டர் எதும் குடிக்கிறீங்களா? இல்ல பரவால வேண்டாம் நோ டொக்டர் முதன் முதலா வாறீங்க றூமுக்கு இதோ பெப்சி கொண்டு வாறன் என்ற படி கருணை குளிர்சாதன பெட்டியை திறந்தான் அதுவரை குளிர்சாதன பெட்டி என்று எனக்கு தெரியாது அதன் முகப்பில் பல புரட்சியாளர்களின் முகங்கள் ஓட்டப்பட்டு இருந்தன.
பார்வையை திருப்பி என் தலைக்கு பின்னால் வந்த குரலின் சொந்தக்காரனைப் பார்க்க முயற்சித்தேன். அதற்குள் குறிப்பறிந்து கருணை அந்த மனிதனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அப்போதுதான் அந்த மனிதனை முதன் முதலாகக்கண்டேன். கணக்கான உயரம் 37 வயது மதிக்கத்தக்க மனிதன் மூன்று நான்கு நாள் தாடி வழித்த முகம் கண்கள். சற்று குழி விழுந்த கண்கள் முகம் பொது நிறம் என்னைக்கண்டவுடன் மெல்லிய புன் சிரிப்பு மட்டும் உதிர்ந்தான். கருணை அந்த மனிதனை தன்னுடைய தங்கையின் கணவன் என்று அறிமுகப்படுத்தினான். முதல் ஒரு முறை சந்திக்கும் போது இவனைப்பற்றி கருணை சொல்லி இருந்தான். இறுதிக்கட்ட போர் முள்ளி வாய்க்காலோடு ஓய்ந்து போக முள்ளி வாய்க்காலில் இருந்து இராணுவத்திடம் சரணடைந்து நேரடியாக வவுனியா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு பின்பு அவனை சாமர்த்தியமாக வெளியே எடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறான் கருணை என்றார் டாக்டர். இதைச்சொல்லும் போது டாக்டரின் முகத்தில் ஒரு வித கலவரம் படர்ந்து இருந்தது. என்னிடம் கதை சொல்லுவதை நிறுத்திவிட்டு குளியல் அறைக்குள் சென்று முகத்தை சற்று குளிர்ந்த நீரால் கழுவி விட்டு குளிசாதனபெட்டியைத் திறந்து கொஞ்சம் பியர் எடுத்து வந்தார். கிளாசில் பியர் அளவாக பரிமாறப்பட்டபோது தொடர்ந்து கதையை கேட்கும் ஆவலில் டாக்டர் அந்தப்பெடியன் தானே இயக்கப்பெட்டை சோதியாயாவடபுருசன்? சிறிய அமைதியின் பின் டாக்டரிடம் வாயை இடது பக்கம் கோனியபடி கேட்டு அதை உறுதி செய்தேன். இப்போது கதை சுவாரசியமாக சென்று கொண்டு இருப்பதையும் தொடர்ந்து டாக்டரிடமிருந்து மிகுதிக்கதையை கேட்டுத்தெரிந்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலெழுந்தது. பியரை அருந்தி முடித்துவிட்டு குவளையை வைக்கும் அதே நேரத்தில் சொன்னார்.
கருணை நாதன் அந்த மனிதனை தனது தங்கையின் கணவன் என அறிமுகப்படுத்தும் முன் அவன் என் இருக்கைக்கு பின்னல் போடப்பட்டு இருந்த கட்டிலில் இருந்தபடி கைத்தொலைபேசியில் எதையோ நோட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவன் என்னை பார்த்ததும் கண்களை வெட்டி மூடியபடி எனக்கு மதியாதை செலுத்தும் முகமாக எழுந்து தலையை மெல்ல சிலுப்பி சற்று புன்முறுவல் செய்தான். அப்போது தான் நான் அவனை கூர்ந்து கவனித்தேன். வெள்ளிக் கம்பிகள் போல நரைமுடிகள் நாடிப்பக்கம் இடைவெளி விட்டு மடிந்து கிடந்தன. கலவரம் அடங்காத முகம். நீண்ட நாட்களாக எதையோ தேடி அலைபவனைப்போல் அவனது கண்கள் பட படத்தன. இருவரும் கைகளைக்குலுக்கினோம். அவனது விரல்களை அழுத்தும்போது கடுமையான கட்டிட வேலை செய்யும் பாக்கிஸ்தானியர்களின் உள்ளங்கையை ஒத்து இருந்தது. அவனது விரல்கள் கம்பிபோல எனது உள்ளங்கையில் உரசியது. அருகில் கருணையின் அனுங்கிய குரல் அம் மனிதனிடமிருந்து முகத்தை வெடுக்கென திருப்பினேன் . எனக்குப்பின்னால் ஒரு தகர நாற்காலி வைக்கப்பட்டு இருந்தது. பரீட்சயமில்லா தண்ணீர்த்தொட்டியில் அமர எத்தனிக்கும் புறாவைப்போல பாதி நாற்காலியில் மெல்ல அமர்ந்தேன். வெளிக்கதவு திறந்து மூட அங்கிருந்தவனை மெல்ல எனது கண்களால் ஊடுருவிப்பார்த்தேன். அப்போதும் அந்த அவன் சதுர அறைக்குள் இருந்துகொண்டு தொலைபேசி தொடு திரைக்குள் மெல்ல மெல்ல மூழ்கி அமிழ்ந்து மொழி இல்லாதவனைப்போல மௌனமாக இருந்தான். வானம் இருண்டு கறுத்துப் போய்க்கிடந்தது. நான் அறையை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது. ஒரு கையில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கப்பில் பால் டீ யும் இன்னொரு கையில் விசுக்கோத்துகளும் நான் முடிப்பதற்காக எடுத்து வந்தான். நன்றி கூடி பெற்றுக்கொண்டேன். கப்புக்குள் நிரம்பிக்கிடந்த பால் டீயை ஒரு சில முரடுகள் குடித்துவிடு அவர்களிடமிருந்து நன்றி கூறி விடைபெற்றேன். கதவை அடைந்ததும் அந்த கட்டிலில் சாய்ந்து இருந்த மனிதனைப்பார்த்தேன். அவன் அப்போது அங்கு இல்லை என் பின்னால் கருணை வந்தான். வீதிவரை வண்டியின் முன் பகுதி புழுதி மணலால் மூடிக்கிடந்தது அதை துப்புரவு செய்ய கருணை முற்பட்டான் அவனைத்தடுத்துவிட்டு வண்டியை ஸ்ரார்ட் செய்தேன். குர் குர் குர் என்ற அலறலோடு உறுமியது வண்டி. கையை குலுக்கி விட்டு புறப்பட்டேன். அப்போது வண்டி பாலை வன மணற்பாதைகளை ஊடறுத்து பெருந்தெருவை அடைய ஒரு சில நிமிடங்கள் வண்டியை அதி வேகமாக செலுத்த வேண்டி இருந்தது. ஒரு உயரமான இடத்தின் வளைவில் இருந்து சனயாவின் அந்த தொழிலாளர்களின் முகாம்களைப்பார்த்தேன். அங்காங்கே சில மின்மினிப்பூச்சிகள் மெல்ல பறக்க ஆரம்பித்தது போல மின் குமிழ்கள் ஒளிர ஆரம்பித்தன.
அன்று நான் முதன் முதலாக ஒரு போராளியின் முகத்தை நேராகப் பார்த்தேன். அவன் தன்னை எனக்கு ஒரு அந்நியனைப்போல உணரச்செய்தான். அவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அவனது முகத்தில் இன்னும் துன்பத்தின் ரேகைகள் அகன்று விடவில்லை. துன்பத்தை சுமந்து வந்திருக்கும் ஒரு வழிப்போக்கனைப்போல என்னால் அவனை ஊகித்து அறிய முடிந்தது. என்னுடைய வீட்டுக்கு வந்தாலும் அங்கு சந்தித்த ஒவ்வொருவரையும் திரும்ப திரும்ப நினைவு படுத்திகொண்டு இருந்தேன் அவர்களை மதிக்க வேண்டும் போல தோன்றியது. துன்பத்தின் இருப்பிடத்தில் இருந்து தப்பி வந்தவனைப்போல அன்று இரவு உணர்ந்தேன். பெரிய லட்சிய கனவு நிறை வேறாமல் கருவோடு அழிக்கப்பட அந்த மக்களையும் அந்த மண்ணையும் ஒரு முறை அல்ல பல முறை நினைத்துக்கொண்டேன் போர் ஒழித்து ஒரு வருடம் முடிந்தாலும் அங்கு மக்கள் நிம்மதியாக வாழ தொடங்கவில்லை என்பது மட்டும் உறுதி. அந்த மக்களுக்கு எதாவது நல்லது என்னால் செய்வ வேண்டும் போல தோன்றியது . ஸ்பீட் இதை என்னிடம் சொல்லி முடித்து விட்டு குசினிக்குள் சென்று சூடான தேநீரோடு வந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் ஒளிர்ந்துகொண்டு இருந்தது . இப்பொது எப்படியாவது மிகுதிக் கதையை அவரிடமிருந்து கறந்து விட வேண்டும் என்றதில் நான் குறியாக இருந்தேன். கதையை கொடுக்க ஆரம்பித்தேன். அவர் சற்று சினந்தபடி சிகரெட் துகள்களை மேசையில் இருந்த ஆஷ் றெயில் தட்டினார் . மேலும் கூற ஆரம்பித்தார்.
ஒரு நாள் என்னை ஒரு நிகழ்வுக்கு அழைத்தார்கள் அந்த நிகழ்வு பிரிகேடியர் தமிழ் செல்வனுடைய நினைவு நாள் என்றார்கள். நான் கவுரவமாக கலந்து கொண்டேன். அன்றுதான் அந்த மனிதனை கண்ட கடைசி நாளாக இருந்தது நிகழ்வை சனையாவில் வசித்து வரும் அத்தனை தொழிலாளர்களும் இதை உணர்வு பூர்வமாக அனுசரித்தார்கள். மஞ்சள் சிவப்பு நிறங்களில் கொடிகள் தாயகப்பாடலின் மெட்டுக்கு அசைந்தன. வெவ்வேறு இடங்களில் இருந்து வருகை தந்து நிகழ்வை பூத்தூவி சிறப்பித்தார்கள். அங்கு உள்ள சுவர்களில் சில போராளிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அஞ்சலி செலுத்தினர். அன்று மதியம் நான் அங்கு இருந்து கிளம்பி விட்டேன். வீட்டுக்கு சென்று தொலைக்காட்சி பெட்டியை திறந்த போது முதலாவது ஆச்சரியம் காத்து இருந்தது அன்று இடம்பெற்ற வணக்க நிகழ்வுகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளி பரப்பு செய்து இருந்தது . அடுத்த நாள் ஒரே பரபரப்புடன் காலை விடிந்தது வைத்திய சாலைக்கு வந்த ஆம்புலன்ஸ் வண்டியில் தமிழ் பொடிகள் காயப்பட்டு வந்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. சரியான தகவல் இன்னும் இல்லை உடனடியாக கருணைக்கு தொலை பேசி செய்தேன். நம்ப முடியவில்லை வணக்க நிகழ்வு நடந்த அன்று இரவு சனையாவில் கலவரம் நிகழ்ந்து இருப்பதாக சொன்னான். பல சிங்கள தொழிலாளிகள் காயமடைந்து போனதாகவும் தமிழர்கள் சிலருக்கு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாகவும் சொன்னான் .
நான் விரைந்து அம்புலன் இரைந்த இடத்தை நோக்கி ஓடினேன். அங்கு கருணையும் அவனது நண்பர்களும் நின்றார்கள். கருணையை தனியா அழைத்து சென்று விபரத்தை அறிந்த போது விறைத்துப்போனேன். கேம்பை சுற்றி ஒட்டி இருந்த தமிழ் செல்வனுடைய போஸ்ட்டர்களை சிங்கள தொழிலாளிகள் கிழித்து விட்டதாகவும் கோபமடைந்த தமிழர்கள் அவர்களது இருப்பிடத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதில் ஒரு சிங்களவன் கண்ணாடி போத்தலால் வயிறு கிழிக்கப்பட்டு பரிதாபமாக இறந்ததாக கருணை சொன்னான். நம்ப முடியவில்லை. சனையா முழுவதும் போலீசார் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது . கொல்லப்படட சிங்களவன் முன்னாள் பாதுகாப்பு படை வீரன் என்ற தகவல் போலீசார் உறுதி செய்தனர். குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர் . கொல்லப்படட இராணுவ வீரன் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும் போர் முடிந்தவுடன் அங்கிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு தெரியாமல் தப்பி அரபு நாட்டுக்கு வந்ததாகவும் இலங்கை சிங்கள செய்தி சேவை ஒன்று தெரிவித்து இருந்தது. வவுனியா தடுப்பு முகாமில் உள்ள நபர்களை கடத்தியது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் குறித்த நபரை இலங்கை அரசாங்கம் சில காலம் தேடி திரிந்ததாகவும் அறியப்பட்டது. அன்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை நானும் முடிந்த அளவு அந்த கொலைகாரனை தெரிந்து கொள்ள முயற்சித்தேன். அந்த கொலைச்சம்பவத்தை சில தினங்களின் பின்பு தொழிலாளர்களால் மறக்கப்பட்டு மறுபடியும் அனைவரும் வேலைக்கு சென்று வந்தனர். கொலை நடந்து ஏழாம் நாள் பின்னிரவு ஒன்றில் கருணையின் தொலை பேசி அழைப்பு அவனோடு பேச ஆரம்பித்த போது ஓவென்று கதற ஆரம்பித்தான். என்ன சம்பவம் என்று அறிய அவன் அழுகையை நிறுத்திய பாடில்லை பயந்து போனேன். இப்போது நம்ப முடியாத ஆச்சர்யம் எனக்காக காத்து இருந்தது. அவன் பிளான் போட்டு வந்து கொண்டிருக்கிறான் என்றான் கருணை. ஸ்பீட் கதையை நிறுத்திவிட்டு தன் அடர்ந்த தாடியயை கோதிக்கொண்டு தன் முன்னால் இருந்த குவளையை மதுவால் நிரப்பினார். அது வரை நான் அவரை கேள்வி கேட்டு குழப்பவில்லை.
சனையா… புஊஊ மயிர். என்று இழுத்தபடி காலை உதைந்தார். அவன் இப்படி செய்வான் எண்டு கனவிலும் நினைச்சு பாக்க இல்லை என்றார். எனக்கு ஒண்டும் புடிபட இல்லை. குழப்பத்தோடு என்ன மச்சி அவன் கருணை சொன்னான் நான் கேட்டேன். அப்போதுதான் அந்த செய்தி தன்னை தூக்கி வாரிப்போட்டதாகவும் கருணையின் மச்சானை வேலைத் தளத்தில் போலீசார் தேடியதாகவும் அவன் அங்கு இல்லை என்றும் எங்கோ நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் மறைந்து இருந்த போது அவனை கைது செய்துவிட்டதாக புலம்பி அழுதான். நிச்சயமகாக எதோ பெரிய சம்பவம் நடக்கப்போது அராபிக்காரணட்ட தப்ப ஏலாது என்று கத்தினான்.
அடுத்த நாள் தொலைக்காட்சி செய்தியில் கருணையின் மச்சான் கைகள் கட்டப்பட நிலையில் கறுத்த துணியால் முகம் மூடப்பட்டு ஒரு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட காணொளியை அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது. அடுத்த நாள் போலீசார் கருணையை விசாரணைக்கு அழைத்தது. அதில் நிச்சயம் அவனது மச்சானுக்கு மரண தண்டனை என்பது உறுதி ஆனது. இனி யாராலும் அவனை காப்பாற்ற முடியாது என்று முடிவானது. சில மாதங்கள் கழிய நான் இந்தியா வந்து விட்டேன். இனி அரபு நாடு செல்வதாக எண்ணம் இல்லை என்று கருணைக்கு ரெலிபோனில் சொல்லி இருந்தேன். அதன் பின்பு கருணை இலங்கை செல்வது பிரச்னை என்றான். அவனை அங்கிருந்து ஒரு அரபி முதிரை பிடித்து போலிக்கடவுச்சீட்டு முடிச்சு அங்கிருந்து லண்டன் எடுத்து விட கொஞ்ச வருடம் பிடிச்சுது மீண்டும் அவன் லண்டன் பாஸ்போட் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு தங்கச்சியை பார்க்க போகும்போதெல்லாம் அவன் என்னையும் அழைப்பான் எனோ நான் அதை தவிர்த்து வந்து இருக்கிறேன். சோதியாவும் பல முறை அழைத்து இருக்கிறாள். சோதியாவை லண்டனுக்கு எடுக்கவேண்டும் என்றது கருணையின் விருப்பம் ஆனால் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நானும் கடைசி வரை அந்தப் போராளியின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. டாக்ட்டர் இவற்றை சொல்லி முடிப்பதட்கு முன் தொலைபேசி அழைப்பு கருணை நாதனிடன் இருந்து
மச்சான் இப்போது நான் டோகாவிலே டிரான்சிட் சில மணிகள் அங்கு நிட்பதாகவும் ஒரு பழைய நண்பன் தன்னை பார்க்க வருவதாகவும் தனக்கு மறுபடி அந்த கொலைகார மண்ணை தொட விருப்பம் இல்லை எயாப்போர்ட் உள்ளேயே இருப்பதாகவும் சொல்லி சிலோன் போய்ட்டு எடுப்பதாக சொல்லி விட்டு தொலை பேசி தொடர்பை துண்டித்தான். இந்த கதையை நான் எழுதி முடிக்கும் போது எனக்குள் எழுந்த சந்தேகம் அந்த சிங்கள ராணுவ வீரனை கொலை செய்வதற்கான காரணத்தை டாக்ட்டரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இன்னும் திடுக்கிட வைத்தது அதை வாசகருக்கு சொல்ல விரும்பவில்லை அவர்களே அதை ஊகித்து அறிந்து கொள்ளட்டும் இப்படியே முடி என்கிறார் டாக்ட்டர் எல்லாம் அறிந்து நான் கதையை முடிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆகின ..