மல்கோவா

அறை முழுவதும் இருள் மண்டிக்கிடந்தது. நான்கு பேர் மட்டும் உயிர் வாழக்கூடிய நான்கு சுவருக்குள் ஒன்பது பேர் உயிர்வாழ்கின்றோம். சுவாசிக்கத் தேவையான பிராண வாயு துண்டிக்கப்படும் போதெல்லாம் ஓங்கி சன்னல் கதவைத்தட்டுத் திறந்து நான் உயிர் வாழக் கற்றுக்கொண்டுள்ளேன். எவருக்கும் நிரந்தரமான படுக்கை இல்லை. ஆறு பேர் படுத்தால் மூன்றுபேர் சமையலறைக்கு  எதிரே அழுக்காகிக் கிடக்கும் சோபாவில் அவரவருக்கான இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். அதிகாலை எவன் எழும்பி வேலைக்கு ஓடுவான்? அந்த இடத்தில் கொடியை நாட்டலாம் என […]

Continue Reading

புறாக்கூடு

நாளை பள்ளிக்கூட விடுமுறை.  வழமையான பள்ளி விடுமுறை நாட்களை எதிர்நோக்கிய  உற்சாகம் அவனிடம் சுத்தமாக இல்லை. இனம் புரியாத சோகத்தின் ரேகை அவனது முகத்தில் படர்ந்திருந்தது. அன்று பாட நேரங்களில் பெரும் பகுதி நேரத்தை பறவைகளை வரைவதிலும், ஒட்டு வேலைகளிலும்  பொழுதைக்கழித்தான். இடை வேளை நேரமானபோது அவன் கூட்டமாகச்சேர்ந்து தன்னை நிந்தனை செய்யும் சக மாணவர்களின் கண்களில் அகப்படாமல் பள்ளி வளாகத்தில் நீண்டு கிளை பரப்பியிருந்த கத்தாப்பு மரத்தின் மீது பாய்ந்து தொங்கியும் ,கீழ் வீழ்ந்து காய்ந்து […]

Continue Reading