மல்கோவா

அறை முழுவதும் இருள் மண்டிக்கிடந்தது. நான்கு பேர் மட்டும் உயிர் வாழக்கூடிய நான்கு சுவருக்குள் ஒன்பது பேர் உயிர்வாழ்கின்றோம். சுவாசிக்கத் தேவையான பிராண வாயு துண்டிக்கப்படும் போதெல்லாம் ஓங்கி சன்னல் கதவைத்தட்டுத் திறந்து நான் உயிர் வாழக் கற்றுக்கொண்டுள்ளேன். எவருக்கும் நிரந்தரமான படுக்கை இல்லை. ஆறு பேர் படுத்தால் மூன்றுபேர் சமையலறைக்கு  எதிரே அழுக்காகிக் கிடக்கும் சோபாவில் அவரவருக்கான இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். அதிகாலை எவன் எழும்பி வேலைக்கு ஓடுவான்? அந்த இடத்தில் கொடியை நாட்டலாம் என […]

Continue Reading

சனையா இருபத்தியெட்டு

விடிவதற்குள்  டாக்ட்டர் தூக்கத்தில் இருந்து  கண்களை திறந்து விட்டார். பாதித்தூக்கத்தில் தலையணையின் அடியில் துடித்து ஓய்ந்து போன தொலைபேசி தொடு திரையை எதோ நினைப்பு வரக் கட்டிலில் கிடந்தபடி மெல்லக் கைகளைத் தலையணையின் அடியில் துளைத்து  தொலைபேசியை எடுத்தார். தொலைபேசியின் தொடு திரையில் அந்தக்குறுந்தகவலும் சில தொண்டை இறுகிபோன அழுகுரல்ப்பதிவுகளும் திரையில் அனுங்கிக்கொண்டிருந்தன. கண்களை அழுத்தித்துடைத்தபடியே குறுந்தகவல்களை எழுத்துப்பிழையின்றித் திரும்பத்திரும்ப பதட்டத்துடன் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் துரித கணேசன். சில நொடிகளின் பின்பு தெளிவாக அதை உறுதிசெய்தார். கருணைநாதனுடைய […]

Continue Reading

சிலுவைப்பாதை

உணர்வின்றிப் பாலத்தின் மேலே கிடந்த என் கால்களை மெல்ல அசைத்துப்பார்த்தேன். கால்கள் அசைந்தன. உடலைத்திருப்பி எழுந்து நிற்க எத்தனித்தேன். வலது முழங்காலில் சதை பிய்ந்து வெள்ளை நிறத்தில் கரடு முரடாக எலும்புகள். கண்கள் இருண்டு தலை சுற்றியது. மூச்சு வாங்க வீதிப்பாதுகாப்பு தூணின் மீது சாய்ந்து கண்களை மெதுவாக மூடினேன். “தம்பி இப்பயெல்லாம் நேரத்துக்கு இருட்டுது மாட்டுத்தனமா பிரண்டு போன அடையானுகள் கார் ஓடுவானுகள் பார்த்து பத்திரமா ஓடு. கெல் மட் கவனம்! என்று காலையில் வைத்தியசாலை […]

Continue Reading